திருப்பதியில் ஒரே நாளில் 88ஆயிரம் பேர் தரிசனம்..!! 3கோடியே 29 லட்சத்துக்கு வசூல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன் தினம் மட்டும், ஒரே நாளில் 88,000 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோடை விடுமுறை காரணமாக திருப்பதிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று காலை 31 காத்திருப்பு அறைகளை கடந்து வெளிவரிசையிலும், ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர்.
24 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்த பிறகே.., தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். தர்ம தரிசனத்திற்கு 24மணி நேரம், 300 ரூபாய் தரிசனத்திற்கு நான்கு மணி நேரமும் பக்தர்கள் காத்திருந்தனர்.
நேற்று முன்தினம் மட்டும் 81,626 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் 51,379 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய பணம் 3கோடியே 29 லட்சத்துக்கு வசூல் ஆகியுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும் பிரசாத லட்டை தவிர, விற்பனை லட்டும் அதிகமாக விற்கப்பட்டு, கோடி கணக்கில் லாபம் கிடைத்துள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.