Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

6 மாதமாக போடப்பட்ட ஸ்கெட்ச்…!! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம்…!! 5000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை..!!

திருவள்ளூரில் இட பிரச்னையிலும் அஸ்வத்தாமனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை விட்டால் தனது மகன் வளர முடியாது என்று கருதிய நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

by logeshwari
October 5, 2024

6 மாதமாக போடப்பட்ட ஸ்கெட்ச்…!! ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம்…!! 5000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கை..!!

 

 

 

 

 

பிரபல  ரவுடிகளுக்கு  இடையுறாக  இருந்ததால் பல  மாதங்களாக   ஸ்கெட்ச்  போட்டு பாதிக்கப்பட்ட   ரவுடிகள்  அனைவரும்  ஒன்று  சேர்ந்து இந்த  கொலையை  செய்ததாகவும்  ரவுடிகள்  தரப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது..  மேலும்  பல்வேறு  காரணங்கள்  வெளியாகியுள்ளது..

குற்றப்பத்திரிகை :

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 4892 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கடந்த செப்டம்பர் 3ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் தாக்கல் செய்துள்ளனர்.  அவரது கொலைக்கான நோக்கம் குறித்து அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.,

அதாவது அரசியலிலும், சமூகத்திலும் மக்கள் முன் நல்ல செல்வாக்காகவும் ஆட்கள் பலத்தோடும் இருந்ததால் அவரை வீழ்த்தி அந்த இடத்திற்கு வர இந்த கொலை நடந்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது..

அஸ்வத்தாமனுடன் பகை :

அதாவது  சென்னையின் அடுத்த பிரபல ரவுடி யார் என்றும்., சென்னையை ஆளப்போவது யார் என்ற போட்டி ரவுடிகளுக்குள்  இருந்துள்ளது., ஆனால் அதற்கு ஆம்ஸ்ட்ராங் அனுமதிக்காததால் அவரை கொலை செய்து அந்த இடத்திற்கும் மற்றவர்கள் வர கூட்டு சேர்ந்து கொலை செய்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய ரவுடிகள் கொலை :

பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனின் நில மோசடி, கட்டப்பஞ்சாயத்து., ரவுடி சம்பவ செந்திலின் காலனி வீடு விவகாரம் உட்பட ஆட்களை மிரட்டி பணம் வாங்குவது , ஆற்காடு சுரேஷ் மற்றும் தென்னரசு ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கு உட்பட இன்னும் 4 பேர் முன்விரோதங்கள்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

ரவுடிகளின் மோதல் விவகாரம் மட்டுமின்றி ஆருத்ரா பண மோசடி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை மீட்டு கொடுத்தது மட்டுமின்றி., அதற்கு பின்னணியில் இருந்தவர்களை கைது செய்வதற்கான முயற்சியிலும் ஆம்ஸ்ட்ராங் ஈடுப்பட்டுள்ளார்.

குறிப்பாக ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவியின் சபதத்தால் கூலிப்படை மற்றும் கூட்டாளிகளின் உதவியோடு ஒரு வருடத்திற்குள் கொலையை அரங்கேற்ற வேண்டும் என வேகப்படுத்தி இருப்பதாகவும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ரவுடி நாகேந்திரன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து கொலையை அரங்கேற்றி இருப்பதும், சிறையில் உள்ள நாகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும்போதெல்லாம் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு திட்டம் தீட்டி இருப்பதும், கொலையில் ஈடுபட்ட நபர்கள் பல்வேறு நட்சத்திர விடுதியிலும் கூட்டம் கூட்டி திட்டமிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

6 மாதம்  ஸ்கெட்ச் :

இந்த கொலை செய்வதற்காக தொடர்ந்து 6 மாதங்களாக ஸ்கெட்ச் போட்டு., ஆம்ஸ்ட்ராங்கின் தினசரி நடவடிக்கை என்ன.? ஆம்ஸ்ட்ராங் எங்கு செல்கிறார்., அதிக நேரம் எங்கு செலவிடுகிறார் என நோட்ட மிட்டுள்ளனர்.. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு தேவையான அனைத்து பண உதவியை ரவுடி சம்பவ செந்தில் கொடுத்திருப்பதாகவும் மூன்றாவது குற்றவாளியான அஸ்வத்தாமன் நாகேந்திரன் போடும் திட்டத்தை வெளியில் இருந்து செயல்படுத்தி இருப்பதையும் தெரிவித்துள்ளனர். கொலையை அரங்கேற்ற மொத்தம் 10 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் மூலம் தொழில்நுட்ப ரீதியான விசாரணையை நடத்தியதாலேயே கண்ணுக்கு தெரியாத மற்ற குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க உதவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் :

காவலர்கள் நடத்திய இந்த தீவிர விசாரணையில் ரவுடிகள் நாகேந்திரன், சம்பவ செந்தில் மற்றும் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 3 குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.. கைதான நபர்கள் மற்றும் உறுதுணையாக இருந்தவர்கள் என 140 வங்கி கணக்குகளை சோதனை செய்து 73 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் ஒன்றரை கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் 80 லட்சம் வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த குற்ற பத்திரிகையில் குற்றவாளிகளின் பெயர்கள்., கொலைக்கான காரணம் உட்பட 300க்கும் மேற்பட்ட சாட்சிகளின் பெயர்கள் மற்றும் 750 வகையான ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5ம் தேதி நடந்த கொடூர கொலைச் சம்பவத்திற்கு 90 நாட்களில் தனிப்படை போலீசார் தீவிரமாக செயல்பட்டு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அனைத்து தரப்பிலும் விசாரணை செய்து., கொலை செய்யப்பட்ட இடத்தில் புலனாய்வு செய்த பின்னரே காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளனர்…

வழக்கறிஞ்சர் மொட்டை கிருஷ்ணன்  :

இதனை சிறப்பாக செய்த காவல்துறை ஆணையர் அருண் அவர்களை நேரி்ல் சென்று பாராட்டியுள்ளனர்.. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வெளிநாட்டிற்கு சென்றுள்ள ரவுடிகள் சம்பவ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணனை உயிருடன் பிடிக்க தற்போது ஒரு சிறப்பு படை அமைத்திருப்பதாக காவலர் ஆய்வாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது… மேலும் வழக்கறிஞ்சர் மொட்டை கிருஷ்ணனுக்கு சொந்தமான கொடுங்கையூரில் உள்ள இடத்தை காவலர்கள் முடக்கியுள்ளனர்…

கல்வெட்டு  ரவியுடன் பகை :

கடந்த 2002ம் ஆண்டு சம்பவ செந்திலின் தந்தைக்காக தலைமைச் செயலக காலனி குடியிருப்பு பகுதியில் ஒரு இடத்தை வாங்கியுள்ளார். ஆனால் அந்த இடமானது ஆஸ்ட்ராங்கிற்கு சொந்தமானது எனக்கூறி ஒரு சிலர் பிரச்சனை செய்து இடத்தை காலி செய்யமாட்டோம் என கூறியுள்ளார்… அதன் பின்னர் ஆம்ஸ்ட்ராங் குழுவிடம் 16லட்சம் ரூபாய் பணத்தை கல்வெட்டு ரவி ஆம்ஸ்ட்ராங் தரப்பிடம் கொடுத்து அந்த பகுதியில் இருந்து காலி செய்யும் படி கூறியுள்ளார்..

இதனால் சம்பவ செந்தில் மற்றும் ஆம்ஸ்ட்ராங் இடையேயான பகை தொடர்ந்துள்ளது. இதை எல்லாம் மனதில் வைத்து தான் ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக 4 லட்சம் ரூபாய் பணத்தை கல்வெட்டு ரவி கொடுத்துள்ளார்..

சிறையிலிருந்து எச்சரித்த நாகேந்திரன்  :

ஆம்ஸ்ட்ராங் கட்சியின் மாவட்ட செயலாளர் தென்னரசு கொலை விவகாரத்தில் ஆம்ஸ்ட்ராங்கின் அழுத்தம் காரணமாகவே வழக்கில் ரவுடி நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ளார். அதன் பிறகு தொடர்ந்து புகைச்சல் இருந்து வந்த நிலையில் நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் மீஞ்சூரில் ஜெயப்பிரகாஷ் என்பவரை துப்பாக்கியை வைத்து மிரட்டியதாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதன்பின்பு நாடாளுமன்ற தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கலாம் என நாகேந்திரன் காய் நகர்த்தியும் தோல்வி அடைந்துள்ளார்.

அதன் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முரளி என்ற நபர் ரவுடி நாகேந்திரனை நேரடியாக ஜெயிலில் சந்தித்து ஆம்ஸ்ட்ராங் வளர்வது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்க இந்த இடத்த விட்டு போயிடுங்க., உங்க கட்சி தலைவரிடமும் சொல்லிடுங்க அது தான் உங்களுக்கு நல்லது., வேணும்னா ஆம்ஸ்ட்ராங் அண்ணனை உங்களுடன் சமாதானம் பேச சொல்லட்டுமா  எனக் கேட்டுள்ளார். அதற்கு நாகேந்திரன் இனி பேச்சு என்ற வார்த்தைக்கே இடம் இல்லை எல்லாம் முடிந்துவிட்டது எனக் கூறியுள்ளார்..

கொலைக்கான  காரணம் :

திருவள்ளூரில் இட பிரச்னையிலும் அஸ்வத்தாமனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை விட்டால் தனது மகன் வளர முடியாது என்று கருதிய நாகேந்திரன் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Tags: #ARMSTRONG MURDER CASE#Madhimugam#Madhimugam NewsARMSTRONG MURDER REASONஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணம்பிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் கொலைரவுடி அஸ்வத்தாமன்ரவுடி கல்வெட்டு ரவிவடசென்னை ரவுடி நாகேந்திரன்
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post
MADHIMUGAM CRIME

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை..!! துணை போன சித்தப்பா..!!  நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.