பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி 2 லட்சம் இழப்பீடு…
மத்தியப்பிரதேச பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி 2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா நகரில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடிவிபத்தில் 11-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் போபால் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அமைச்சர் உதய் பிரதாப் சிங், கூடுதல் தலைமைச் செயலாளர் அஜித் கேசரி மற்றும் இயக்குநர் ஜெனரல் ஹோம் கார்டு அரவிந்த் குமார் ஆகியோரை சம்பவ இடத்துக்கு நேரில் பார்வையிட்டனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதையடுத்து, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு 2 லட்சமும், காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.