நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கல்லூரி தேர்வுகள் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளது
தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர் பதவியை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வி அமைச்சர் ராஜகண்ணப்பன், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே கல்லூரி தேர்வுகள் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் குற்றச்சாட்டு மீதான விசாரணை, நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)