விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் 3 நாட்கள் பிரச்சாரம்..!
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 6, 7,மற்றும் 8 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் வீதி வீதியாக சென்று பிரசாரம் மேற்கொள்கிறார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவர் மறைவுக்கு முன்பாக நாடாளுமன்ற தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டு விட்டதால், அந்த தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை நடத்த முடியாமல் போனது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதிக்கு வருகிற 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அக்கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன.
இந்த நிலையில், தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபடுவது சந்தேகம் என்றும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டும் வரும் 6, 7, 8 ஆகிய தேதிகளில், விக்கிரவாண்டி தொகுதியில் வேன் மூலம் வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தி.மு.க. வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..