2கே கிட்ஸ் அத்து மீறல்..!! விட்டுப்போகாத சிறை வாசம்..!! பரபரப்பான சென்னை OMR…!!
குற்ற வழக்கில் சிறை சென்ற இருவர் சிறையில் நண்பர்களாகி சிறையில் இருந்து வெளியே வந்த மறுநாளே இரண்டு இருசக்கர வாகனத்தை திருடிய வழக்கில் மீண்டும் பழகிய இடத்திற்கே அழைத்து சென்ற சிறை சாவகாசம்.
சென்னை OMR சாலை சோழிங்கநல்லூர் பொண்ணியம்மன் கோயில் பகுதியை சேர்ந்த அரசு பேருந்து நடத்துநர் 50 வயதான பாஸ்கர் என்பவர் சோழிங்கநல்லூர் குமரன் நகர் சிக்னல் அருகே உள்ள ஒரு டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். வாகனத்தின் அருகில் நின்று இருந்த அவர் வாகனத்தில் இருந்து சாவியை எடுக்காமல் இருந்த நிலையில் அந்த சமயத்தில் அங்கு R15 பைக்கில் வந்த இருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பேருந்து நடத்துனரின் பைக்கை திருடி சென்றனர்.
தனது பைக் திருடபட்டதை பார்த்த பாஸ்கர் உடனிருந்த நண்பரின் பைக்கில் திருடி சென்ற பக்கை பின்தொடர்ந்தது பிடிக்க முயன்ற போது அதிவேகத்தில் இளைஞர்கள் பைக்கை ஓட்டி தப்பி சென்றுள்ளனர். பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள செம்மஞ்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 19ம் தேதி 28 வயதான பாஸ்கர் புகார் அளித்தார்.
அதுபோல் OMR சாலை செம்மஞ்சேரி ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் நிறுத்து வைத்திருந்த R15 இருசக்கர வாகனம் காணவில்லை என 28 வயதான ஏழுமலை செம்மஞ்சேரி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இரண்டு பைக் அடுத்தடுத்து திருடு போனதாக வந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி குற்றப்பிரிவு ஆய்வாளர் சக்திவேல் தலைமையில் உதவி ஆய்வாளர் ராஜு, தலைமை காவலர் யாசர் அரபாத், காவலர் வீரமணி, ரவி, ரஃபிக், தினேஷ், அஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பைக் திருடப்பட்ட பகுதி மற்றும் வழியெங்கும் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கே.கே.சாலையில் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் வாகன தனிக்கையில் ஈடுபட்டபோது வாகன பதிவு எண் இல்லாமல் பைக்கில் வந்த இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இருவர் வந்த பைக் திருடப்பட்ட பைக் என்பது தெரியவந்தது. பின்னர் இருவரையும் பிடித்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 24 வயதான பிரகாஷ்ராஜ் சென்னை குமரன் நகர் காவல் நிலைய எல்லையில் பைக் திருடிய வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் புழல் சிறைக்கு சென்றது தெரியவந்தது. அதேபோல் தாம்பரம் அடுத்த செம்பாக்கம் பகுதியை சேர்ந்த 24 வயதான மோகன் மோகன், சேலையூர் காவல் நிலைய எல்லையில் பைக் திருட்டு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை என இரு குற்ற வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி (16.08.2024) புழல் சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.
சென்னை குமரன் நகர் காவல் நிலையம், புறநகர் சேலையூர் காவல் நிலையம் என இருவேறு பகுதியில் நடைபெற்ற பைக் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்கில் சிறை சென்ற பிரகாஷ்ராஜ் – மோகன் இருவரும் சிறையில் இருக்கும்போது நண்பர்களாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த (18.12.2024) 18ம் தேதி புழல் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் 150 பேர் இரவு 10 மணிக்கு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் பூத்த பிரகாஷ்ராஜ் மோகன் இருவரின் நட்பு, இருந்து வெளியே வந்ததும் அடுத்த நாளே 19. ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி பகுதியில் அடுத்தடுத்து இரு பைக்குகளை திருடி சென்றுள்ளனர். மேலும் இருவரும் திருடிய பைக்கை மற்ற திருடர்கள் போல் விற்பனை செய்யாமல் பை செல்லும் இடம் சென்று அதில் உள்ள பெட்ரோல் தீர்ந்தால் அங்கிருக்கும் மற்றொரு பைக்கை திருடி ஊரை சுற்றி வலம் வந்துள்ளனர்.
கஞ்சா வாங்க தேவைப்படும் பணத்திற்கு வீட்டின் பூட்டை உடைத்து திருடுவதும், கஞ்சா புகைத்த பின்பு ஊரை சுற்ற பைக் தேவைப்படுவதால் பைக் திருடியதாக விசாரணையில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். போதையில் ஊரை சுற்ற பைக் திருடிய இருவர் அவர்களது நட்பு உருவான சிறைக்கே மீண்டும் சென்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..