கடந்த ஒரே ஆண்டில் இந்தியாவில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனையாகியுள்ளது.
2024 -25 ம் நிதியாண்டில் ஒரு கோடியே 40 லட்சம் ஏசி விற்பனையாகியுள்ளது. தற்போது, வெப்ப நிலை சில சமயங்களில் 50 டிகிரி செல்சியஸை எட்டுகிறது. இது வளைகுடா நாடுகளில் உள்ள வெப்ப நிலைக்கு சமமானது. இதன் காரணமாக, இந்தியாவிலும் அறைகளில் ஏசி இல்லாமல் இருக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால், ஏசி விற்பனை தாறுமாறக உயர்ந்துள்ளது. இந்த 1.40 கோடி ஏசி இயந்திரங்களும் இயங்குவது 8,500 டன் நிலக்கரியை எரிப்பதற்கு சமமாகும்.
இது தொடர்பாக ஜப்பானின் ஏ.சி தயாரிப்பு நிறுவனமான டெய்க்கின் தலைவர் கே.ஜே. ஜாவா கூறுகையில், ‘அதிகரிக்கும் வெப்ப நிலையும் ஏ.சி எளிதாக வாங்கும் வகையில்ன கடன்களும் கிடைப்பதால் குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட ஏசி வாங்கி வீடுகளில் பொருத்துகின்றனர். இரவில் நல்ல உறக்கம் கிடைப்பது உடல் நலத்துக்கு நல்லது என்பதால், பலரும் ஏ.சியை முக்கியத்தும் கொடுத்து வாங்குகின்றனர்’ என்கிறார்.
1901ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் கடந்த 2024ம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.