இன்று அதிகாலை மகாராஷ்டிராவில் நடந்த பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் பழைய மும்பை-புனே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மும்பையின் கோரேகானில் இருந்து ‘பாஜி பிரபு வடக் குரூப்’ உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில், புனே மாவட்டத்தில் உள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு கோரேகானுக்கு திரும்பியுள்ளனர்.
இன்று நள்ளிரவு 1 மணி அளவில், இசைக்குழுவினருடன் புனேவில் இருந்து மும்பை நோக்கி புறப்பட்ட பேருந்தானது இன்று அதிகாலை 4.50 மணி அளவில் கட்டுப்பாட்டை இழந்து மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள ஷிங்ரோபோ கோயில் அருகேயுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 13 பேர் மரணமடைந்தனர். படுகாயம் அடைந்த 27 சிகிச்சைக்காக கோபோலி கிராமிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் மும்பையில் உள்ள சியோன் மற்றும் கோரேகான் மற்றும் பக்கத்து பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post