உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மணிகண்டன் என்பவர் தாருகாபுரம் பகுதியில் 100 நாள் வேலைதிட்டத்தின் கீழ் தனியார் நிலத்தில் பணிகள் நடைபெறுவதாக புகார் அளித்து அதற்கான ஆதாரங்களை சமர்பித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தி சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாருகாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்களை தனியார் நபரின் விவசாய நிலத்தில் உரம் போடுவது, தென்னை மரங்களை பராமரிப்பது உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்தபடுகிறார்கள் என்று பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள் முன்னிலையில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் அமர்வு 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் தனியார் நிலத்தில் பனி செய்த ஆதாரங்களை விசாரித்த பின் அதிருப்தி முடிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை செயலரை இணைக்க உத்தரவிட்டனர். மேலும் 100 நாள் திதஹீன் நடைமுறைகள் தொடர்பான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.