உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக ..!! களத்தில் மதிமுகம்…!!
வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் உள்ள வன்றந்தாங்கல் ஏரியின் மதகுகளை முழுமையாக மூடிவிட்டதால் கழிவு நீர் தேங்கியுள்ளது இதனால் சுற்றுசூழல் பாதிப்படைவதுடன் நிலத்தடி நீர் முற்றிலுமாக சுற்றுவட்டார பகுதிகளில் மாசடைகிறது விவசாயமும் பாதிகபடுகிறது.எனவே அரசு உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி ஏரியை பழையபடி நல்ல நிலைக்கு கொண்டு வரவேண்டுமென சமூக ஆர்வலர் இளங்கோவன் மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமியை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் நல்லிணக்க நடைபயணம் தொடங்கப்பட்டது. காமராஜபுரம் பகுதியில் தொடங்கிய பேரணியில் காங்கிரஸ் தேசிய செயலாளர் சூரஜ் ஹெக்டே கலந்துகொண்டு பேரணியை தொடக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையின் சார்பில் இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களில் மீட்கும் பணிகள் குறித்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் விழிப்புணர்வு செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக கன மழை பெய்ததின் காரணமாக ஏற்கனவே மரத்தின் ஓரத்தில் குழிகள் தோண்டப்பட்டு மரத்தின் வேர்கள் பிடிப்பு இல்லாமல் இருந்ததால் நூறாண்டுகள் பழமை வாய்ந்த புளியமரம் திடீரென வேரோடு சாய்ந்து குடியிருப்பு பகுதிகளின் தெருவில் விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இந்த நிலையில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மேல்மாமுடிமாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் மாடுகளை வைத்து வளர்த்து வருகிறார்.. இந்த நிலையில் தனக்கு சொந்தமான 50 அடி கிணற்றில் மாடு தவறி கத்திக் கொண்டிருந்தது.இதனை அறிந்த ஞானசேகரன் உடனடியாக நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்..
இதனையடுத்து நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில் விரைந்து வந்த நாட்றம்பள்ளி தீயணைப்பு துறை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி கிணற்றில் தவறி விழுந்த மாட்டை பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பின் தலைவர் ஸ்ரீநீவாசன் தலைமையில் கார்ணாம்பட்டு பகுதியில் மிகவும் கைலாயநாதர் ஆலயம் உள்ளது. இது நிலத்தின் நடுவே உள்ள கோவிலாகும். தற்போது அங்கு ஒரு தனியார் பெட்ரோல்பங்க் அமைக்கவுள்ளதால் ஆலயம் செல்லும் வழியையும் ஆக்கிரமித்துள்ளனர். ஆகவே கோவிலுக்கு செல்லும் பாதையை மீட்டுதரக்கோரி மனு அளித்தனர்.