நெல்லை மாவட்டம் விஜயநாராயணம் அருகேயுள்ள இலந்தைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மணிமேகலை. இவரின் இரண்டாவது கணவரின் பெயர் இசக்கிமுத்து. மணிமேகலைக்கு முதல் கணவர் மூலம் பழனிகுமார் (வயது 15)என்ற மகன் உண்டு. இந்த நிலையில், பழனிகுமாருக்கு இசக்கி முத்து பல்சர் பைக் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. 18 வயதை எட்டாத சிறார்களை பைக் ஓட்ட அனுமதிக்காதீர்கள் என்று போலீசார் பல முறை எச்சரித்துள்ளனர். ஆனால், இதையெல்லாம் மறந்துவிட்ட இசக்கி முத்து 15 வயது சிறுவனுக்கு பைக் ஓட்ட கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், சிறுவன் பழனிகுமார் பைக்கில் நேற்றிரவு விஜயநாராயணம் அருகே பத்மநாதபுரம் விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். எதிரே பரப்பாடியை சேர்ந்த பீம்சிங் காமராஜ் என்பவர் பைக்கில் வந்துள்ளார். இந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்ட பழனி குமார், சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினார். உடல் மீது டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பீம்சிங் காமராஜ் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இது தொடர்பாக, விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் சிறுவனுக்கு பைக் வாங்கிக் கொடுத்த மணிமேகலையில் இரண்டாவது கணவர் இசக்கிமுத்து மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.