நீ மட்டும் தான் கடிப்பியா… பாம்பு கடித்த வாலிபர் மீண்டும் பாம்பை இரண்டு முறை கடித்ததால் இறுதியில்..!
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் உள்ள ராஜௌலி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் லோகர். 35 வயதாகும் இவர், ராஜௌலி பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில், ரயில்வே பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ரயில்வே அருகே அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை ரயில்வே ஊழியர் லோகர் பணி முடிந்து இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, அவரை விஷப் பாம்பு ஒன்று கொத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சந்தோஷ், அந்த பாம்பை தனது கையில் பிடித்து, இரண்டு முறை கடித்துள்ளார்.
அதாவது, ஒரு பாம்பு தங்களை கொத்திவிட்டால், அதனை இரண்டு முறை பதிலுக்கு நாம் கடித்துவிட்டோம் என்றால், விஷம் முரிந்துவிடும் என்பது அந்த பகுதி உள்ளூர் மக்களின் மரபாக இருந்து வருகிறது.
இதனை உண்மை என்று நம்பிய சந்தோஷூம், பாம்பை இரண்டு முறை கடித்துள்ளார். அதில் அந்த பாம்பு இறந்துவிட்டது.
இதையடுத்து, சந்தோஷை மீட்டு அவரது சக பணியாளர்கள், அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அவருக்கு பாம்பின் விஷம் உடம்பில் போகவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-பவானி கார்த்திக்