மகளை தனது மார்போடு அணைத்து தாய் தற்கொலை ..காரணம் குறித்து போலீசார் விசாரணை..! சோகத்தில் குடும்பத்தினர்..!
கோவை மாவட்டம் காரமடை பகுதியில் வசித்து வருபவர் சந்தோஷ். 31 வயதான இவருக்கு திருமணமாகி கலாமணி என்ற மனைவியும் இரண்டரை வயதில் அஸ்விகா என்ற மகள் இருந்தார்.
இந்த நிலையில் சந்தோஷ் தோட்டத்திற்கு சென்றபோது கலாமணி தன்னுடைய மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரததால் அதிர்ச்சி அடைந்த கணவர் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் அவர்கள் கிடைக்கததால் பதற்றம் அடைந்த அவர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் வீட்டின் பக்கத்திலிருந்து கிணற்றில் ஓரத்தில் கலாமணியின் செருப்பு கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் பார்த்தனர்.
அங்கு கலாமணி மற்றும் குழந்தை இருவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு உடல்களையும் மீட்டனர் .
அப்பொழுது கலாமணி தன்னுடைய மார்போடு சேர்த்து மகள் அஷ்விகாவை துணியால் இறுக்கமாக கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் தாய் மற்றும் மகளின் உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்