உலக தமிழ் சங்கம் 15..!! வாழ்க வையம்.. வாழிய செந்தமிழ்..!!
மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழா அடுத்த வாரம் புதன்கிழமை நடைபெற உள்ள நிலையில் ஆண்டு தோறும் மல்லை தமிழ்ச்சங்கம் சார்பில் பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அந்த வகையில் மல்லை தமிழ் சங்கத்தின் நோக்கம் அரசு பள்ளிகளில் குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகின்ற மாணவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் இடத்திலும்,
தமிழில் முதல் வகுப்பில் வருகின்ற மாணவர்களுக்கு ஊக்க தொகையும் சான்றிதழும் பரிசுகளும் வழங்கி சிறப்பித்துக் கொண்டு வருகிறது.
இதுவரை 49 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ள அவர், வருகின்ற 22ம் தேதி நடைபெற உள்ள மல்லை தமிழ் சங்கத்தின் 15 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தனது 50வது படைப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றை நினைவு கூறும் வகையில் “மிசா முதல் கோட்டை வரை” என்ற தலைப்பில் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட உள்ளார்..
வருங்காலத்தில் படைப்பாளிகளின் புத்தகங்களுக்கு மல்லை தமிழ்ச்சங்கத்தினுடைய மேடை பெரும் பங்களிப்பாக இருக்கும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என கேட்டுக்கொண்டுள்ளார்..
– லோகேஸ்வரி.வெ