“பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்”
பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கேட்டுக்கொண்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.
மதிமுக மாநில மகளிர் அணி செயலாளர் மல்லிகா தயாளன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ, துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்தியா, மற்றும் மதிமுக மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.
மதிமுக மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பேசிய வைகோ, இந்த காலத்தில் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்…
பின்னர் பேசிய துரை வைகோ, ஆண் பிள்ளைக்கு நிகராக பெண் பிள்ளைகளுக்கும் கல்வி, விளையாட்டுகளில் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுகொண்டார்
இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக துணைப் பொதுச் செயலாளர்கள் மல்லை சத்தியா வேதனை தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.