டெல்லி சுல்தான்பூரியில் நள்ளிரவு, 20 வயதுடைய அஞ்சலி என்ற பெண் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருக்க, அவரது வண்டி மீது கார் ஒன்று மோதியது. மோதிய காரின் அடியில் அப்பெண் சிக்கிக் கொள்ள, இதனால் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்
டெல்லியிலுள்ள சுல்தானுபூரில் நேற்று நள்ளிரவில் அஞ்சலி என்ற பெண் ஒருவர் ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்த பொழுது அவரது ஸ்கூட்டி ஓர் காரின் மேல் மோதியதால் விபத்துக்குள்ளானது. மேலும் அந்த காரின் அடிதியில் அன்ஹா பெண் சிக்கி கொண்டுள்ளார் இதனை கவனிக்காத அந்த காரின் ஓட்டுநர் 12 கிமீ தூரம் வரை அந்த பெண்ணை இழுத்து சென்றுள்ளார். இதனால் அந்த உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த சிலர் இரவு 3 மணி அளவில் புகாரளிக்க அதனை அடுத்து ஒரு மணி நேரத்தில் ஒரு பெண்ணின் சடலம் சாலையில் இருந்ததை கண்டறிந்தனர் உடனே டெல்லி காவல்துறை அந்த காரின் நம்பரை வைத்து கார் ஒட்டிய தீபக் கண்ணா, அமீத் கண்ணா, கிரிஷன், மித்து மற்றும் மனோஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் கூறுகையில், தனது பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அவரது உடல் கண்டறியபடும் போது அரைநிர்வாணமாக இருந்ததாகவும் கூறினார். மேலும், தனது மகளின் மரணத்திற்கு தகுந்த நீதி கிடைக்க வேண்டும் என்றும் அழுதபடி பேசினார். இதனை தொடர்ந்து காவல்துறை தெரிவிக்கையில், முதலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரிக்கப்படும் என்றும் காரில் இருந்தவர்கள் மது போதையிலும் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டதாலும் இந்த விபத்து நடந்துள்ளதாகவும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லபட்டுள்ளதாக கூறினர்.
மேலும் காவல்துறை கூறுகையில், விவசாரணையில் அவர்களுக்கு தங்களது கார் ஒரு ஸ்கூட்டர் மீது மோதியது தெரியும் ஆனால் அந்த பின் காரின் அடியில் சிக்கி கொண்டது தெரியவில்லை என்று கூறியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.