தமிழகத்தின் மிக பெரிய தொழிலதிபரான லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி தி லெஜெண்ட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அவரது படம் எப்போது ஓடிடி யில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் தற்போது அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டின் முன்னனி தொழிலதிபர்களும் ஒருவரான லெஜெண்ட் சரவணன் அவரது கடையின் விளம்பரங்களுக்காக முன்னணி கதாநாயகிகளுடன் இணைந்து விளம்பர படங்களில் நடித்த அவர் தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஆண்டுகளுக்கு திரைப்படத்தின் வேலைகள் நடைபெற்று வந்தது. அதனை அடுத்து இந்தியா முழுவதும் பான் இந்தியா படமாக சரவணா அதனை வெளியிட்டார். படம் எவ்வாறு இருக்கிறது என்பதை பார்ப்பதை விட லெஜெண்ட் சரவணா எவ்வாறு நடித்துள்ளார் என்று பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
நீங்கள் அனைவரும் காணும் வகையில் ‘தி லெஜண்ட்’ விரைவில்…#TheLegend #LegendSaravanan pic.twitter.com/RbIzAbC3dw
— Legend Saravanan (@yoursthelegend) January 1, 2023
படம் வெளியாகி மிகவும் சுமாரான விமர்சனங்களை பெற்றது. காட்சிக்கு கட்சி பிரமாண்டங்களை வைத்திருந்த அந்த படத்தில் சரவணாவின் நடிப்பு போதிய அளவு இல்லை என்ற விமர்சனம் எழுந்தது, மேலும் கதை பழையதாகவும் அழுத்தமற்று இருபத்தாகவும் விமர்சனங்கள் வந்தது. இதனை அடுத்து அந்த படம் எப்போது ஒடிடி தலத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் அது குறித்தான தகவல் வெளியாகாமலேயே இருந்தது இந்நிலையில் அண்ணாச்சி சரவணன் அந்த படம் குறித்து புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், அனைவரும் காணும் வகையில் தி லெஜெண்ட் திரைபடம் விரைவில் என்று பதிவிட்டுள்ளார். இதனால் அந்த படத்தை பார்க்க விரும்பிய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.