நரிக்குறவர் இன மாணவர்களை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து சென்ற சீர்காழி வட்டாட்சியர்
சீர்காழி அருகே நரிக்குறவர் இன மாணவர்களை புத்தகக் கண்காட்சிக்கு அழைத்து சென்று அவர்கள் விரும்பிய புத்தகங்களை பரிசளித்த சீர்காழி வட்டாட்சியருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சீர்காழி அருகே அரசூர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகள் வெளியுலகமே அறியாமல் இருப்பதாக செய்தி அறிந்த சீர்காழி வட்டாட்சியர் இளங்கோவன், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் எண்ணத்தில், அனைவரையும் மயிலாடுதுறை புத்தகக்கண்காட்சி திருவிழாவிற்கு அழைத்து சென்று மாணவர்கள் விரும்பிய அனைத்து புத்தகங்களையும் தனது சொந்த பணத்தில் வாங்கி பரிசளித்துள்ளார்.
இவரின் இந்த செயலுக்கு பொதுமக்கள் அனைவரும் தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.