திமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்பௌம் என்று தேர்தல் வாக்குருதி அளித்திருந்தது. அந்த வகையில் யார் யாரெல்லாம் உரிமைத் தொகை பெற தகுதியானவர்கள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…
2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என திமுக அரசு தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இதுதொடர்பான அறிவிப்பு வர உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள நிலையில், அதற்கான பட்டியல் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன் படி மகளிர் உரிமைத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்க வாய்ப்புள்ளது என்பது குறித்த விரிவான தகவல் வெளியாகியுள்ளது. நிலையான மாத வருமானம் இல்லாமல் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் உழைக்கும் பெண்கள், கணவனால் விடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு மாதம் 100 ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எச்.எச். பிரிவு மற்றும் அந்த்யோதயா அன்ன யோஜானா பிரிவில் ரேசன் அட்டை வைத்திருக்கும் 1.14 கோடி பேருக்கும், முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ளவர்களையும் பட்டியலில் சேர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரி செலுத்துபவர்கள் மற்றும் மத்திய, மாநில அரசு பணிகளில் உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பில்லை எனக்கூறப்படுகிறது. கணவன் மாதம் 15 ஆயிரத்திற்கு மேல் மாத வருமானம் பெற்றாலும், 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன் அடிப்படையில் தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணியில் மகளிர் மேம்பாட்டு கழகம் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Discussion about this post