தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தொற்று பரவல் குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
நேற்று 37 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று ஒரே நாளில் 40 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 315 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 62 பேருக்கும், சென்னையில் 54 பேருக்கும், செங்கல்பட்டில் 18 பேருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 257 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தடுப்பு வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என பொதுமக்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Discussion about this post