யார் யாருக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தெரியுமா..?
வருகின்ற செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என இதற்கு முன் அறிவிக்கப் பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கு தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இது போன்ற மாபெரும் திட்டம் செயல்படுத்தப் படவில்லை என கூறினார்.., இதனை தொடர்ந்து பேசிய அவர் ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்கள் பெற வேண்டும் என்றும் ஆவணங்கள் இல்லா விட்டாலும் குடும்ப தலைவிக்கு உதவி தொகை கொடுக்கப்படுவது உறுதி.
சிறப்பு முகாம் அமைத்து கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும்.., இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் 7000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
ஊக்க தொகை பெற :
* 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.
* ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவர் மட்டுமே வந்து பெற முடியும்.
* உச்ச வயது கிடையாது.
* இணையதளம் மூலம் விண்ணப்பித்து கொள்ள முடியும்.
* ஸ்மார்ட் கார்டு ( குடும்ப அட்டை ) உங்கள் இடத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மட்டுமே விண்ணப்பித்துக்கொள்ள முடியும்.
* பெண் அரசு ஊழியர்களுக்கு இந்த உதவி தொகை கிடையாது.
* பெண் சட்டமன்றம் மற்றும் நாடாளு மன்றம் உறுப்பினர்களான குடும்ப தலைவி களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடையாது.
* சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு கிடையாது.
* ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்போர் இதை பெற முடியாது.
மேலும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமம் பெற வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் ரேஷன் கார்டின் அடிப்படையில் குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்படுவார்.