கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாரின் வழக்கு ரத்து….
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு (dk-shivakumar) எதிரான பணமோசடி வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு கர்நாடக காங்கிரஸ் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமாரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதில், கணக்கில் வராத 9 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதனை வருமான வரித்துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
2018-ஆம் ஆண்டு பதிவுசெய்த வழக்கில் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி டி.கே.சிவகுமார் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.
இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டி.கே.சிவகுமார் மீது பதிவு செய்யப்பட்ட சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், புகாரை மட்டும் வைத்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர முடியாது என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான அமலாக்கத்துறையின் மறுஅய்வு மனு நிலுவையில் உள்ளதால், அதனை மேற்கோள்காட்டி இந்த வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டனர்
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.