ஆறு மாதக் குழந்தைக்கு எந்த வகையான உணவுகளை கொடுக்கலாம் ?
குழந்தை பிறந்ததும் அம்மாக்களுக்கு குழந்தையின் பராமரிப்பு பற்றி பல விதமான சந்தேகங்கள் தோன்றும். அதில் முக்கியமான ஒன்று, குழந்தைக்கு தரும் உணவுகள்.
எத்தனை வயது வரை தாய்ப்பால் கொடுக்கலாம், ஆறு மாதத்திற்கு பிறகு என்ன வகையான உணவுகளை கொடுத்தால் அவர்களுக்கு அது சத்து நிறைந்ததாக இருக்கும். என பல கேள்விகள் இருக்கலாம் ? உங்களின் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் இதோ
முதலில் சாதம் நன்கு மசித்து, அதனுடன் பச்சை பருப்பு, துவரம் பருப்பு, என சேர்த்து மசித்து கொடுக்க வேண்டும்.
இரண்டாவது காய் கறிகள் காரட், உருளைக்கிழங்கு, சவ்சவ், போன்ற காய்கறிகளை வேக வைத்து சிறிது அளவு உப்பு சேர்த்து, மசித்து கொடுக்கலாம் .
மூன்றாவதாக பழங்கள் ஆப்பிள், வாழைப்பழம், ஸ்ட்ராபெரி, அரைத்து ஜூஸாக இல்லாமல், கொஞ்சம் கெட்டியாக கொடுத்து பழக வேண்டும்.
குழந்தைகள் விளையாடும் நேரத்தில் அவர்களுக்கு பிஸ்கட், கொடுத்து பழக்க படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் குழந்தையின் உடல் ஆரோக்கியமாகும் என சொன்னார் குழந்தையின் ஊட்டச்சத்து ஆலோசக மருத்துவர் லேகா ஸ்ரீதரன்.
மேலும் இதுபோன்ற பல விவரங்களை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி