டெங்குவை ஒழிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் எடுக்க போகும் அடுத்தகட்ட நடவடிக்கை..?
டெங்குவை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் 1ம் தேதி, ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு, மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், கொசுக்களை அழிக்கும் நடவடிக்கைகளையும் சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் அக்.1-ஆம் தேதி ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் ஏற்கனவே 476 மருத்துவ பரிசோதனை குழுக்களும், பள்ளி மாணவர்களுக்கான 805 குழுக்களும் செயல்பட்டு வருவதாக கூறினார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளதாகவும், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க நிலவேம்பு கஷாயம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் என்ற அறிவிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post