கார்த்திகை தீபம் என்றால் என்ன..?
தீப வழிபாட்டில் முக்கியமானது “கார்த்திகை தீபம்”.
கார்த்திகை தீபம், கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வரும்.
“அன்பே தகழியா ஆர்வமே நெய்யாக இன்புருது சிந்தை இடுதிரியா என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றனேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நாள்” என்று பாடிவிட்டு கார்த்திகை மாதத்தில் அன்றாடம் சாயங்காலம் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
கார்த்திகை தீபத்தன்று ஒவ்வொரு வீட்டிலும் சாயங்காலம் விளக்கு தீபம் ஏற்றி, நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட வேண்டும்.