தமிழக மீனவர்களுக்கு நடு கடலில் நேர்ந்த..! இலங்கை கடற்படை செய்த செயல்..!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.. இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 13-க்கும் மேற்பட்ட மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
மேலும் இலங்கை கடற்படையினர் அவர்களின் மூன்று படகுகளையும் பறிமுதல் செய்துடன், தமிழக மீனவர்களை சிறைபிடித்து ஊர்காவல் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதேபோல் கடந்த மாதம் ஜூன் 30ம் தேதி ராமேஸ்வரம் அருகேயுள்ள தனுஷ்கோடியில் 4 நாட்டு படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் 25 பேரை கடற்படையினர் கைது செய்தனர்..
அதன் பின் முதலமைச்சர் அறிவிப்பின் படி, கைது செய்யப்பட்ட மீனவர்களில் 22 பேரை முதலில் விடுதலை செய்தனர் பின் 3 மீனவர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை ரத்து செய்து கடந்த வாரம் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டும் 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– லோகேஸ்வரி.வெ