ஆபாச பேட்டி எடுத்த விஜே..! இளம்பெண் தற்கொலை முயற்சி..! பெண் வெளியிட்ட பகீர் பதிவு..!
சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அண்ணாநகரில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். அப்போது அவர், “வீரா டாக் டபுள் எக்ஸ்” என்ற யூடியூப் சேனலுக்கு காதல் தொடர்பான கேள்விகளுக்கு இரட்டை அர்த்தங்கள் குறித்து ஜாலியாக பேட்டி அளித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது அந்த பெண் அளித்த பேட்டி “யூடியூப் சேனல்” மற்றும் “இன்ஸ்டாகிராம்” பேஸ்புக் போன்ற சமூக சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வைரலாக பரவியது. குறிப்பாக அந்த பெண் தெரிவித்த கருத்துக்கு கேலி – கிண்டல்கள் எழுந்துள்ளது.
அந்த வீடியோவில் பேட்டி அளித்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லை. அண்ணன் மட்டுமே. பெற்றோரை இழந்த அந்த பெண், அண்ணனின் கண்காணிப்பில் புரசைவாக்கம் பகுதியில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
தான் அளித்த பேட்டி பற்றி தனது சகோதரர் மற்றும் உறவினர்களுக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ..? என்ற அச்சத்திலும், அந்த வீடியோக்களுக்கு கீழ் வந்த கமெண்ட்ஸ்களாலும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் எலி மருந்தை வாங்கி சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பின் அவரை, அவரது தோழிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்து கீழ்பாக்கம் போலீசார் தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் கூறியதாவது, நான் “வீரா டாக் டபுள் எக்ஸ்” என்ற
யூடியூப் சேனலுக்கு நான் முதலில் பேட்டி தர மறுத்தேன். ஆனால் அவர்கள் எனது அனுமதி இல்லாமல் இந்த வீடியோவை வெளியிட மாட்டோம் என சொன்னார்கள். அந்த நம்பிக்கையில் தான் நானும் எனது கருத்துக்களை கூறினேன். ஆனால் இப்போது அந்த வீடியோ யூடியூபில் வெளியாகி என்னை பலரும் கெட்ட வார்த்தைகளால் திட்டி வருகின்றனர்..
எனவே சம்பந்தப்பட்ட “வீரா டாக் டபுள் எக்ஸ் யூடியூப் சேனல்” மீதும், பேட்டி எடுத்த பெண் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து வீரா டாக் டபுள் எக்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வந்த வளசரவாக்கம் ஏ.கே.ஆர்.நகர் 1-வது தெருவை சேர்ந்த ராம் (வயது 21), உதவியாளர் யோகராஜ் (21), பேட்டி எடுத்த ஸ்வேதா (31) என்ற பெண் ஆகிய 3 பேர் மீதும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– லோகேஸ்வரி.வெ