நீதிபதியை பாஸ் என அழைத்த விஷால்..! விளாசிய நீதிபதி..! 150 கேள்விகளால் திணறிய விஷால்..!
லைகா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட இந்த வழக்கில் 2 நாளாக உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஷாலிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் விஷாலும் ஒருவர்.., கடந்த 2004ம் ஆண்டு செல்லம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் “விஷால்”… அதன் பின் பல்வேறு படங்கள் மூலம் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்..
அந்த படங்களுக்கு பின் “விஷால் பிலிம் பேக்டரி” என்று ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.. அதற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் 21.29 கோடியை கடனாக வாங்கியுள்ளார்.., அந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியுள்ளது.
தற்போது அந்த தொகையை திருப்பி செலுத்தும் படி விஷாலிடம் கேட்டுள்ளனர்.. ஆனால் விஷால் பணத்தை திருப்பி தரவில்லை.. அதே சமயம் தனது நிறுவனம் தயாரிக்கும் படங்களின் உரிமைகளை லைகாவிற்கு வழங்குவதாக கூறி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
தற்போது அந்த ஒப்பந்தத்தை மீறி, “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை தன்னிச்சையாக வெளியிடுவதாக கூறி விஷாலின் பட நிறுவனத்திற்கு எதிராக லைகா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு. அந்த வழக்கு நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது..
அந்த வழக்கின் குறுக்கு விசாரணையை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணை செய்யப்பட்டது.., இரண்டாவது நாளாக விஷால் இன்று உயர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். விஷாலிடம் லைகா நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகாவாச்சாரி குறுக்கு விசாரணை செய்தார். அப்போது, திரைப்படத் துறையில் படத்தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக வழங்கப்படும் கடன்களுக்கு எவ்வளவு சதவீதம் வட்டி வசூலிக்கப்படுகிறது என 150-க்கும் மேற்பட்ட கேள்விகள் விஷாலிடம் இரண்டரை மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்டது.
அப்போது விஷால் நீதிபதியிடம்.., லைகா நிறுவனம் என்னிடம் வெறும் தாளில் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்.., அது என்னை ஏமாற்றி வாங்கப்பட்டது என விஷால் கூறியுள்ளார். அதற்கு நீதிபதி இது சினிமா அல்ல நடிப்பதற்கு பணத்தை திருப்பி தருகிறேன் என சொன்னது உண்மையா என கேட்டுள்ளார். அதற்கு விஷால் நீதிபதியை “பாஸ்” என அழைத்துள்ளார்.. பாஸ் என்று எல்லாம் சொல்லக்கூடாது பதில் மட்டுமே சொல்ல வேண்டுமென நீதிபதி விஷாலை கண்டித்துள்ளார்..
இந்த வழக்கில் குறுக்கு விசாரணை முடிவடைந்த அடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி பி.டி.ஆஷா அடுத்த மாதம் செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.