சுமார் 18 ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு, விராட்கோலி ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்க வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்படி, சமூகவலைத்தளத்தில் வாழ்த்தியவர்களில் பாவ்னா கோலி திங்கராவும் ஒருவர். இவர், வேறு யாருமல்ல விராட் கோலியின் உடன் பிறந்த இளைய சகோதரி.
ஆர்.சி.பி கோப்பையை கைப்பற்றியதும் இன்ஸ்டா பக்கத்தில் விரிவாக தன் சகோதருக்கு ஒரு வாழ்த்து பதிவை பாவ்னா பதிவிட்டிருந்தார். ஏராளமானோரை, அந்த பதிவு ஈர்த்திருந்தது.
இதற்கிடேயே ஒருவர் பதிவிட்டிருந்த கமெண்டில், உங்களை பற்றி விராட் கோலி ஒரு பேச்சிலும் குறிப்பிடவில்லை. அதுமட்டுமல்ல, உங்கள் போஸ்டையும் விராட் கோலியோ, அவரது மனைவியோ லைக் செய்ததும் இல்லை. நீங்கள் உங்கள் சகோதரருடனும் , மைத்துனியுடனும் நல்ல உறவை பேணவில்லையே என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள பாவ்னா, உண்மையா அன்பை புரிந்து கொள்ளும் பொறுமையை கடவுள் உங்களுக்கு வழங்கட்டும். யார் மீது யார் எவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பதை உலகுக்கு காட்ட வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் வாழ்க்கையில் போதிய அன்பு கிடைக்கிறதா? பாதுகாப்பற்ற உணர்வுடன் இருக்கிறீர்களா? என்று தெரியவில்லை. உண்மையா அன்பு எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்வதில்லை. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என்று பதில் அளித்திருந்தார்.
இந்த பதிலை சிறிது நேரத்தில் பாவ்னா அழித்து விட்டார். எனினும், விராட் கோலியில் ரசிகர்கள் பாவ்னாவின் பதில் கமெண்டை ஸ்கீரின் ஷார்ட் எடுத்து வைத்து பரப்பி வருகின்றனர்.
ஐ.பி.எல் இறுதிப் போட்டி நடந்த ஜூன் 3ம் தேதி இரவு விராட் கோலியின் பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த பாவ்னா, ‘இன்றைய இரவு அழவும் சிரிக்கவும் வைத்தது. இதற்காக நீ நீண்ட காலம் காத்திருந்தாய். உன்னை நேசித்த அனைவரும் உன்னுடன் சேர்ந்து அழுதோம். அனைவருக்கும் நீ மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் கொடுக்க கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். சொர்க்கத்தில் உள்ள ஒருவர் தனது மகனை கண்டு பெருமைப்படுகிறார் ‘என்று குறிப்பிட்டிருந்தார்.