மீண்டும் மோதும் விஜய் அஜித் படங்கள்..! அதுவும் அந்த 2 படம்..!!
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் அஜித் மற்றும் விஜய். அஜித் விஜய் படத்துக்கு போட்டி என்ற மனப்பான்மையில், இவர்களது ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது. அதிலும் இருவரது படங்கள் ஒரே நாளில் வெளியானால் சமூக வலைத்தளங்களில் நிச்சயம் அனல் பறக்கும். இந்த நிலை தற்போது வரையிலும் மாறவே இல்லை.
ஒரே நாளில் வெளிவந்த அஐித் விஜய் திரைப்படங்கள் :
அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான வீரம் மற்றும் ஜில்லா ஆகிய திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில், அஜித் நடித்த வீரம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. ஜில்லா கொஞ்சம் சுமாரான படமாக அமைந்தது. அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அஜித், விஜய் படங்கள் 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று மோதின.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படமும், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியாகின. ஆனால், இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் சமூக வலைதளங்களில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் அலப்பறைகள் ஓயவில்லை.
வழக்கம் போல சமூக வலைத்தளங்களில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிப் பேசி சண்டையிட்டுக் கொண்டனர். தற்போது அஐித், விஜய் திரைப்படங்கள் மோத இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது விஜய் தற்போது நடித்து வரும் கோட் திரைப்படமும், அஜித் தற்போது நடித்து வரும் விடமுயற்ச்சி திரைப்படமும் திபாவளி அல்லது பொங்கல் விருந்தாக வரும் எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் தற்போது மகிழ் திருமேனேி இயக்கத்தில் விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பாதியே முடிந்துள்ள நிலையில் அஜித் அடுத்தாக குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 95 கோடிக்கு வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் தளபதி விஜய் கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமையையும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தை 110 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
குட் பேட் அக்லியை விட கோட் உரிமம் அதிகம் :
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் இரண்டு படங்களையும் வாங்கியுள்ளது. இதையடுத்து “குட் பேட் அக்லி” படத்தின் தொகையை விட “கோட்“ படத்தின் தொகை 15 கோடி ரூபாய் அதிகமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை என்றாலும் திரை உலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
– பவானி கார்த்திக்.