ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத திருவிழா…!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள திருவள்ளுவர் தெருவில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோவிலில் வைகாசி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
முன்னதாக கோவிலில் கடந்த 4-ஆம் தேதி அப்பகுதி சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் அம்மனுக்கு காப்பு கட்டி விரதமிருந்தனர்.
மேலும் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று ஊரில் உள்ள பெண்கள் அனைவரும் ஆஞ்சநேயர் குளக்கரையில் இருந்து பல்வேறு புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கரகம் மற்றும் பால் குடங்களை தலையில் சுமந்தபடி கோவிலுக்கு ஊர்வலமாக வந்து கருவறையில் உள்ள கெங்கையம்மனுக்கு தங்களது கைகளால் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
இதனை தொடர்ந்து ஆண்கள் பெண்கள் என அனைவரும் சிலம்பம் மற்றும் மான் கொம்பாட்டம் ஆடியபடி காப்பு கட்டி விரதமிருந்த இளைஞர்கள் ஏராளமானோர் உடம்பில் அலகு குத்தி கயிறின் மூலமாக அந்தரத்தில் தொங்கியபடி புஷ்ப மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக அமர்ந்திருந்த கெங்கையம்மனுக்கு மாலை அணிவித்து தீபாரதனை காண்பித்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்..
மேலும் அம்மன் புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்துடன் கம்பீரமாக சிம்ம வாகனத்தில் அமர்ந்தபடி பம்பை மற்றும் ராஜமேளதாளங்கள் முழங்க வாலாஜாபேட்டை முழுவதும் ஊர்வலமாக கொண்டு சென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கெங்கையம்மன் கோவில் திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை மனதில் நினைத்து கோவிந்தா.. கோவிந்தா.. . என பக்தி முழக்கங்களை வெளிப்படுத்தி அம்மனை வழிபட்டு சென்றனர்.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”