வாடிய மாமர இலைகள் ரூ. 500 க்கு ஒரு நாட்டில் விற்கப்படுகிறது.
நமது நாட்டில் மாமர இலைகள் ஆங்காங்கே இறைந்து கிடக்கும் . கண்டு கொள்ள கூட மாட்டோம். அவை, மாரத்தின் கீழ் காய்ந்து கருவாடாக கிடக்கும். ஆனால், மாமரக்கிளையிலுள்ள மருத்துவ மகத்துவத்தை பிரிட்டன் நாடு உணர்ந்துள்ளது. இதன் காரணமாக, அங்கே வாடிய மாமரக்கிழைகள் ஒரு பாக்கெட் 500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது, அந்த நாட்டு பணத்தில் 4.49 பவுண்டுகள் ஆகும்.
வாடிய மாமரக்கிளைகளை அப்படியே கடித்து சாப்பிடுகின்றனர். சிலர் பொடியாக்கி சுடுநீரில் கலந்து அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சிலர் டீயில் கலந்தும் குடிக்கின்றனர். இப்படி செய்வதால் உடலில் ரத்தோட்டம் சீராகிறது. சுகரை கட்டுப்படுத்துகிறதாம். அதோடு, உணவு செரிமானத்துக்கும் உதவுகிறது என்று நம்புகிறார்கள்.