மும்மொழி கொள்கை..!! ஒன்றிய அரசு நிர்பந்தம்..!! அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு..!!
மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ள ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்வதாக அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.
கன்னியாகுமரி திருவள்ளூவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் அண்ணா நூலகத்தில் ஓவிய கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஓவிய கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்பு கட்டணங்களை நிலுவை வைக்க வேண்டிய அவசியம் இல்லை.. மத்திய அரசுதான் நிலுவை வைத்துள்ளது. அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க தடை போடுகிறார்கள். மும்மொழி கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளதாகவும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நம் மாணவர்கள் எது தேவையோ அவற்றை முழுமையாக செய்ய முடியும் என்றும் நாம் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்றும் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர தமிழக அரசு முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மத்திய அரசுக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் 29 பைசா மட்டுமே வழங்கப்படுவதாக ஒன்றிய அரசை குற்றம் சாட்டியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..