இரயில் பயணிகள் பாதிலேயே இறக்கம்..! பரபரப்பான அரியலூர்..!
இன்றுதமிழகம்முழுவதும் குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் பங்கேற்பதற்காக 150க்கும் மேற்பட்டோர் நேற்றுமாலை சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ரயிலில் பயணித்துள்ளனர்.
முன்பதிவு இல்லாத பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் முன் பதிவு செய்த பயணிகள் சென்ற S1 முதல் S7 பெட்டி வரை ரயிலில் ஏறி பயணம் செய்துள்ளனர்.
முன்பதிவு பெட்டியில் உள்ள பயணிகளுக்கு அவசர தேவைகளுக்கு கூட செல்ல முடியாமல் வசதி குறைவு ஏற்பட்டதால் அவர்களுக்கும், முன்பதிவு இல்லாமல் பயணம் செய்த பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த முன்பதிவு செய்த பயணிகள் ரயில்வே பரிசோதகரிடம் தொடர்ந்து புகார் செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஓட்ட கோயில் அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலின் அவசர நிறுத்த சங்கிலியை இழுத்துள்ளனர்.
இதனையடுத்து ரயிலில் பயணம் செய்த ரயில்வே பரிசோதகர் அரியலூர் ரயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
அரியலூர் ரயில் நிலையத்திற்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து S1 முதல் S7 பெட்டிகளில் பயணித்த முன்பதிவு இல்லாத பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர். இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
இறக்கிடப்பட்ட பேரில் 30க்கும் மேற்பட்டோர் இன்று குரூப் 4 தேர்வில் பங்கேற்க உள்ளதை அறிந்த ரயில்வே போலீசார் பின்னால் வந்த மங்களூர் மற்றும் ராமேஸ்வரம் விரைவு ரயில்களில்30 பேரையும் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
தேர்வு எழுத பதட்டத்துடன் சென்றவர்களுக்கு ரயில் ஏற்பட்ட பிரச்சனையால் சற்று மனவேதனையுடன் சென்றுள்ளனர். இதுபோன்று மிகப்பெரிய தேர்வுகள் நடைபெறும் காலத்தில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..