டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு..! இன்று 20 லட்சம் பேர்..!
தமிழ்நாடு முழுவதும் 7,247 மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு இன்று தொடங்கியது. வி.ஏ.ஓ., வனக்காவலர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை சுமார் 20 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இன்று காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை குரூப்-4 தேர்வு நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 பதவிகளில் வரும் கிராம நிர்வாக அலுவலர்- 108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனி செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியிட்டது. பிப்ரவரி 28ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருந்தால் போதும், ஆனால் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். 6,244 பணியிடங்களுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் 20 லட்சத்து 36 ஆயிரத்து 774 பேர் தேர்வு எழுத அனுதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 702 பேரும், பெண்கள் 12 லட்சத்து 18 ஆயிரத்து 922 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 150 பேரும் அடங்குவர். சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 1 லட்சத்து 33 ஆயிரத்து 276 பேர் எழுதியுள்ளனர்.
இப்பதவிகளுக்கான எழுத்து தேர்வு இன்று காலை தொடங்கியது. காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடக்கிறது. பிற்பகல் 12.30 மணிக்கு தேர்வு முடிந்தாலும், 12.45 மணி வரை இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு கூடத்துக்கு செல்போன், மோதிரம் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து மையங்களுக்கும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குரூப்-4 தேர்வுக்கான முடிவுகள் ஏற்கனவே அறிவித்தபடி அடுத்தாண்டு ஜனவரியில் வெளியாகும் என தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
அத்து மீறும் 2கே கிட்ஸ்…! 13 வயது சிறுமிக்கு தந்தையாக போன 20 வயது இளைஞர்..!
– லோகேஸ்வரி.வெ
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..