திருவண்ணாமலையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கன்று வீழ்ச்சி நோய் தடுப்பூசி முகாம்…
திருவண்ணாமலையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கன்று வீழ்ச்சி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் , கன்று வீழ்ச்சி நோய் தடுப்பூசி முகாம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
கிருமியினால் ஏற்படும் கொடிய நோய், ஆடு, மாடு மற்றும் பன்றிகளை தாக்கி கருச்சிதைவை உண்டாக்கும், கடைசி மூன்று மாதங்களில் கருச்சிதைவினை உண்டாக்கி கன்று வீழ்ச்சி ஏற்படும். இந்தநோய் தாக்கத்தை தடுக்கும் விதமாக 4 முதல் 8 மாதம் வயதுடைய பெண் கன்றுகளுக்கு போடப்பட்டது.
இதில் திருவண்ணாமலை உதவி இயக்குனர், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு ராமன் கலந்து கொண்டு கன்று வீச்சு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.