இவர் மனம் வைக்காமல் இது நடக்காது..!!
கடவுள்களில் மூத்த கடவுள் சிவன் விநாயகர் என சொல்லுவார்கள் ஆனால் மூத்த கடவுள் என்றால் விநாயகர் அவரது தந்தை “சிவன்..”
சிவன் அழிக்கும் கடவுள் என பலரும் சொல்லுவார்கள் ஆனால் சிவனை வழிபட்டால் கஷ்டங்கள் தீர்ந்து விடும்..
சிவன் அவர் மனம் வைக்காமல் நம்மால் அவரை காண முடியாது.. குறிப்பாக பரவதமலை ஏறி சிவனை வழிபாடு செய்ய முடியும்…
ஆன்மீகத்தில் மிகவும் முக்கியத்துவமும், மகத்துவமும் உடையது வில்வ மரம்..
அதற்கு காரணம், வில்வ இலைகள் சிவன் என்றும், முட்கள் சக்தி என்றும், அதன் கிளைகள் வேதங்கள் என்றும் போற்றப்படுகின்றன.
அதனால்தான் சிவ பூஜைகளில் வில்வ இலைகள் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
வில்வத்தால் அர்ச்சனை செய்தால் தீய சக்திகள் குடும்பத்திலிருந்து அகலும், பீடித்திருக்கும் தோஷங்களும் விலகும், வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
சிவன் விபூதி மகிமை :
சிவனின் சொத்து என்று பக்தர்களால் அழைக்கப்படுவது விபூதி..
சிவனின் விபூதியை நெற்றியில்., மார்பில்., கைகளில்., தோல் பட்டையில் பூசினால் அவரது அருளை முழுமையாக பெற முடியும்..
நோய் வயப்பட்டவர்கள் அவரது விபூதியை பூசிவந்தால் நோய்கள் விலகி விடும் என சொல்லுவார்கள்..