மழையில் மண் வாசனை வருவதற்கான காரணம்.. இது தான்..!!
மழை பெய்யும் போது மண் வாசனை வருவதற்கான காரணம் என்னவென்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா?.
அதற்கான காரணம் என்னவென்றால் மண்ணில் இருக்கும் ஒரு வகையான பூஞ்சை அந்த பூஞ்சையின் பெயர் அசிடினோமைசைட் (actinomycide).
இந்த பூஞ்சையானது மண் சூடாகவும் , ஈரப்பதமாகவும் இருக்கும் போது மண்ணில் வளர்கிறது.
மண் வறண்டு போகும் போது சின்ன சின்ன விதிகள் அதாவது சின்ன சின்ன செல்களை வெளியிடுகிறது.
அந்த செல்கள் “ஜியோஸ்மின்” (geosmin)என்று அழைக்கப்படும்.
மழை நீர் மண்ணில் படும் போது அந்த குளிர்ந்த நீரால் மண் ஈரப்பதமாக மாறி அந்த வாசனை வெளிவருகிறது.
இப்படி உருவாகும் இந்த மண் வாசனையை ஆங்கிலத்தில் “பெட்ரிக்கோர்” (petrichor)என்று அழைப்பார்கள்.
-ரோகிணி