காடாக இருந்தது நாடாக மாறியது இப்படி தான்..! இனி அடுத்த பங்காரு இவரா..?
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீட நிறுவனர் பங்காரு அடிகளார் நேற்று மாலை காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறிது காலமாக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
பங்காரு அடிகளாரை முன்னிலைப்படுத்த உதவியவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். கடற்கரையில் அவர் நடத்திய கலச வேள்வி பூஜையை பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்து கொடுத்து அப்போதைய குடியரசு தலைவர் ஜெயில்சிங்கை அழைத்து வந்து நடத்தியவர் எம்ஜிஆர். அதன் பிறகு தான் பங்காரு அடிகளார் புகழ் பரவத் தொடங்கியது . பங்காரு அடிகளார் சாதனை என்பது கோவில் கருவறைக்குள் பெண்கள் எந்த காலத்திலும் செல்லலாம் .
இந்த இரண்டும் அவர் நிகழ்த்திய செவ்வாடை புரட்சி என்றே கூறலாம். இதனால் தான் ஏழை எளிய மக்களும் அவரை தேடி வந்தனர். அது மட்டும் அல்லாமல் பசுமை புரட்சியும் செய்து உள்ளார். மேல்மருவத்தூர் கோவில் பகுதியில் காய்ந்து போன ஒரு குளம் இருந்தது அதனை தூர் வாரியதால் தொடர்ந்து மழை தண்ணீர் தேங்கியது.
பின்னர் அந்தப் பகுதியில் மரங்கள் வளர்ப்பதின் காரணமாக தொடர்ந்து மழை பெய்து எப்போதும் குளம் நிரம்பி காட்சி அளித்தது . அப்போதுதான் மருத்துவக் கல்லூரிக்கு கட்டிட பணிகள் நடந்து கொண்டிருந்தன. அரசியல் ரீதியாக அவர் யாரையும் பகைத்துக் கொள்ளவில்லை. இதனால் அதிமுக, திமுக அரசுகள் அவருக்கு பக்கபலமாகவே இருந்தன .
அவரது மருத்துவக் கல்லூரியிலும் பிரச்சனை ஏற்பட்டு சோதனைகள் நடந்துள்ளன.. அதையெல்லாம் மீறி தமிழ்நாட்டின் ஆன்மிகவாதி என்று மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா ,கேரளம் உள்பட இந்தியா முழுவதும் இருந்து ஏராளமான மக்கள் அவரை தரிசிக்க வந்தனர்.
அவர் உயிரோடு இருக்கும் போது அவருக்கு ஒரு பளிங்கு சிலை செய்து வைத்திருந்தனர். இனிமேல் அவரது நினைவிடத்தில் அந்த சிலை வைக்கப்படலாம் .அவருக்கு இரண்டு மகன்கள் அன்பழகன், செந்தில். ‘ இதில் அன்பழகன் தந்தை போலவே கோயில் பூஜை முறைகளை செய்து பக்தர்களுக்கு ஆட்சி வழங்குவதை பலமுறை பார்க்க முடிந்தது .
எனவே அவருடைய ஆன்மிக வாரிசாக அவர் தந்தை செய்த பணிகளை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்..
இதையும் படிக்க மறக்காதீங்க : இறைவனடி சேர்ந்த பங்காரு அடிகளார்..!! உயிர் இழப்பு காரணம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்..
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..