“இது கேவலமான செயல்..” – டி.டி.எஃப். வாசன் செய்த காரியம்.. பொங்கியெழுந்த திருப்பதி கோவில் நிர்வாகம்..
சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்கள் என்று சொன்னதும் முதலில் ஞாபகம் வருபவர் பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன்.
அந்தவகையில் டிடிஎஃப் வாசன் மற்றும் அவரது நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளி மாநிலம், வெளிநாடுகளில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் 32 அறைகளிலும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசிப்பதற்காக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், யூடியூபர் டிடிஎஃப் வாசனும் அவரது நண்பர்களும் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்களிடம் ப்ராங்க் வீடியோ எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அந்த வீடியோவில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் அவருடைய ஒளிப்பதிவாளர் அசீஸ் ஆகியோர் திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்த அறையை திறப்பதுபோன்ற வீடியோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் போட்டுள்ளார். அதனை tirupathi Funny video என்ற பெரியல் டிடிஎஃப் வாசன் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்தநிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் குறும்பு வீடியோ எடுப்பது கேவலாக செயல். அத்தகைய நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் அறிவித்துள்ளது.
மேலும் இதுதொடர்பாக டிடிஎஃப் வாசன் உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் அளிக்க தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகின்றது.
-பவானி கார்த்திக்