வியாழக்கிழமை சாய்பாபா அருள் கிடைக்க இந்த விரதம் அவசியம்..!!
வியாழக்கிமை சாய்பாபாவிற்கு சிறந்த நாள்.., இந்த நாளில் அவரின் முழு அருளும் கிடைக்க இந்த விரதம் அவசியம்..,
சாய்பாபா மந்திரத்தை மனதார சொல்ல வேண்டும்.
ஓம் சாய் நமோ நமக,
ஸ்ரீ சாய் நமோ நமக,
ஜெய் சாய் நமோ நமக,
சத்குரு சாய் நமோநமக.
எனும் மந்திரத்தை சொல்லி முடித்த பின்.., வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும்.
* பின் பால், தேநீர், பழச்சாறு மற்றும் இனிப்பு போன்ற ஆகாரங்களை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். அன்று ஒரு நாள் முழுவதும் இப்படியான உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
* விரதம் இருக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அசைவ உணவு எடுத்துக்கொள்ள கூடாது.
* நாள் முழுவதும் பட்டினியாக இருந்து விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.., நீர் ஆகாரம் அல்லது உணவு எடுத்துக் கொள்ளலாம்.
* ஒரு தூய ஆசனம் அல்லது பலகையின் மேல் பாபாவின் படம் அல்லது சிலை வைத்து மஞ்சள் துணியால் கட்ட வேண்டும். பின் குங்குமம், திலகம், சந்தனம் வைக்கலாம்.
* பூக்களை மாலையாக கோர்த்து கட்டி பாபாவிற்கு சூட்டலாம், முடிந்த வரை மஞ்சள் நிற பூக்கள் வைத்து வழிபடலாம்.
* மாலை நேரத்தில் சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
* கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை செய்து மனதார வேண்டிக் கொள்ளலாம்..
* தொடர்ந்து 9 வாரங்கள் இந்த விரதத்தை கடை பிடிக்கலாம்.., தொடர்ந்து 9 வாரங்கள் இந்த விரதம் இருந்தால். 9வது வாரம் பாபாவின் அருள் கிடைக்கும்..