கால்கள் தானே இல்லை மனதில் நம்பிக்கை இருக்கிறதே, ஒரு ஊன முற்றவரின் கதை – ஊரும் உறவும் 21
பசி என்று வரும் பொழுது வீட்டில் உணவு சமைக்கவில்லை என்றால் போனில் ஆர்டர் செய்வது வழக்கம். காலையில் சாப்பிடும் டிபன் முதல் இரவு சாப்பிடும் குல்பி வரை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ள முடியும், எவ்வளுவு சீக்கிரம் ஆர்டர் செய்கிறோம், அதற்கு ஏற்றமாதிரி பணம் கிடைக்கும் என்பதால், இந்த தொழில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் மிகவேகமாக செயல் படுவார்கள்.
அப்படி ஒரு முறை உணவு ஆர்டர் செய்தபோது, ஒரு ஊனமுற்ற சுப்பிரமணி என்ற ஒரு நபர் உணவு டெலிவரி செய்தார், பார்த்ததும் ஒரே ஆச்சரியம் இருகால்கள் ஊனமுற்ற இவர், எப்படி இவ்வளவு உழைக்கிறார் என்ற ஆச்சரியத்தில் அவரிடம் சென்று ,
இந்த நிலைமையிலும் நீங்கள் உழைப்பதற்கு மனதார பாராட்டு கிறேன், ஆனால் ஒரு சில இடங்களில் உணவு டெலிவரி 5வது மாடி, 6வது மாடி எல்லாம் வர சொல்லுவார்களே, உங்களால் எப்படி செல்ல முடியும் என்று கேட்டோம்.
அதற்கு அவர், மாடி வீட்டில் இருபவர்கள் உணவு ஆர்டர் செய்தால், மேலே சென்று தான் உணவு டெலிவரி கொடுப்பேன், இதுவரை ஒருவரை கூட நான் கீழே இறங்கிய வர சொல்லியதில்லை. காரணம் நான் கீழே வர சொன்னால் என்ன காரணம் என்று கேட்பார்கள்.
என் கால்கள் இப்படி இருக்கிறது என்று சொன்னால் என்னை நான் தாழ்த்தி கொள்வதை போல இருக்கும், ஒரு சிலர் அப்போ ஏன் பா இந்த வேலைக்கு வந்த, ஒக்காந்து பாக்குறா மாதிரி எதாவது வேலைக்கு போலாமே என்று கேட்பார்கள்.
ஒரு சிலர் இந்த நிலைமையிலும் உழைக்கிறார் என்று பாராட்டுவார்கள், நான் பாராட்டு வாங்க வேண்டும் என்பதற்காக மேலே சென்று உணவு கொடுக்கவில்லை, பசியில் இருக்கும் ஒருவரை மேலே கீழே இறக்கி அவரை சிரமம் படுத்த வேண்டாம் என்பதற்காக தான் என்று கூறிவிட்டு அடுத்த ஆர்டர் வந்தவுடன் உணவு டெலிவரி செய்ய கிளம்பி விட்டார்.
வேலைய கிடைக்கவில்லை, வேலைக்கு சென்றால் பெரிய உத்தியோகத்தில் உள்ள வேலைக்கு தான் செல்வேன் என்று சொல்லாமல், அயராது உழைக்கும் இவர் உயர்ந்து நிற்கட்டும்.
மேலும் இதுபோன்ற பல உண்மை கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..