நடிகர் சூரி தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் உணவகம் என்ற ஒன்றை நடத்திவருகிறார். இந்த சைவ உணவகத்தை சூரியின் சகோதரகள்தான் நடத்துகின்றனர். மதுரைக்கு செல்லும் செலிபிரிட்டிகள் தவறாமல் அந்த ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில் சூரியின் சகோதரர்களில் ஒருவரான லட்சுமணன் மீது முத்துச்சாமி என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.,
அதில் கூறியிருப்பதாவது “நான் மதுரையில் அலைகள் என்ற பெயரில் அச்சகம் ஒன்றை நடத்திவருகிறேன். எனது அச்சகத்துக்கு அருகில்தான் அம்மன் உணவகம் இருக்கிறது. இந்த ஹோட்டலில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வாகன நிறுத்துடம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சூரியின் சகோதரர் லட்சுமணனிடத்தில் புகார் அளித்தேன். ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதோடு, எனது கடையின் பூட்டை உடைத்து கடைக்குள் வந்து பணம் மற்றும் முக்கியமான ஆவணங்களை லட்சுமணன் திருடி சென்றுள்ளார். அந்த இடத்தையும் ஆக்கிரமிக்க பார்க்கிறார். இந்த அத்துமீறல் எல்லாம் சூரிக்கு தெரிந்துதான் நடக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை . எனவே, லட்சுமணன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.