13 வயது மாணவியிடம் ஆசிரியர் செய்த வேலை.. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்…!
விருதுநகர் மாவட்டம், சாத்தூரை சேர்ந்தவர் தங்கப்பாண்டியன். திருமணமான இவர் அதே பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.
இந்தநிலையில் இவர் அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவியிடம் திருமணமானதை மறைத்து பழகி வந்துள்ளார். மேலும் மாணவியிடம் பேச செல்போன் இல்லாததல் அவரது தாய் நம்பரை வாங்கியுள்ள அவர் அந்த எண்ணுக்கு கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆபாச படங்கள் மற்றும் ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.
நாளடைவில் கணவனின் நடத்தையில் சந்தேகமடைந்த தங்கப்பாண்டியனின் மனைவி அவரது செல்போனை ஆய்வு செய்தார். அதில் அவரது செல்போனில் இருந்து மற்றொரு எண்ணுக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு இது குறித்து பேசியுள்ளார். இதனைகேட்டு ஆத்திரமடைந்த மாணவியின் தந்தை மாணவையிடம் விசாரித்தார். அப்போது ஆசிரியர் தங்கப்பாண்டியனின் செல்போனில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.
உடனே சாத்தூர் காவல் நிலையத்திற்கு விரைந்த மாணவியின் தந்தை ஆசிரியர் தக்கப்பாண்டியன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதி செய்த சாத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதி செய்து தங்கப்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
-பவானி கார்த்திக்