வேறோருவருடன் சென்ற மனைவி.. சோகத்தில் குழந்தையை கொன்ற கொடூரம்..!
சென்னை பூவிருந்தமல்லி சென்னீர்குப்பம் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர் மோகன் (32)-பரிமளா (28) இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருந்தார்.
இன்று காலை மோகன் மற்றும் குழந்தை இருவரும் வீட்டிலிருந்து நீண்ட நேரமாக வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் பூந்தமல்லி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உள்பக்கமாக பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து சென்று பார்த்தனர். அப்போது மோகன் மற்றும் குழந்தை இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர்.
பின்னர் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரிமளா உறவினர் ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்த நிலையில் அவருடனே குழந்தையுடன் சென்று விட்டார்.
அதன்பின் தன் மனைவி இருக்கும் இடத்தை அறிந்த மோகன் நேற்று அங்கு சென்று அவருடன் தகராறு செய்துவிட்டு குழந்தையை மட்டும் அழைத்து வந்துள்ளார்.
அதன் பிறகு மிகுந்த மன வேதனையில் இருந்த மோகன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதனால் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்து பின்னர் தானும் அந்த விஷயத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்