கணவனை கொலை செய்த மனைவி.. தப்பி ஓட்டம்.. போலீஸ் விசாரணை..!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சரளபள்ளம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 40). இவர் விராலிமலை – கீரனூர் சாலையில் கல்குத்தான் பட்டியில் உள்ள ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான தனியார் செங்கல் சூளையில் தனது மனைவி இளஞ்சியம், மனைவியின் தங்கை மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட நான்கு பேர் செங்கல் சூளையில் தங்கி பணியாற்றி வந்தனர்.
இந்த நிலையில், சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி இளஞ்சியத்ற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் சொல்லபடுகிறது.
இதனைதொடர்ந்து இன்று அதிகாலை செங்கல் சூளைக்கு வந்த உரிமையாளர் ஆறுமுகம் அங்கு சுப்பிரமணி பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதைக் கண்டு அதர்ச்சியடைந்தார்.
மேலும் இதுகுறித்து விராலிமலை காவல் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் வழக்கு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இளஞ்சியம் மற்றும் அவரது தங்கை மற்றும் தங்கையின் கணவர் ஆகியோரை தேடி வருகின்றனர்.
-பவானி கார்த்திக்