வெட்டி வீசப்பட்ட வலை..!! நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்..!! வேதனையில் தமிழக மீனவர்கள்..!!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
வங்க கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர்., எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதாக கூறி கைது செய்வதும்., கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தற்போது தொடர்கதையாகி விட்டது., கடந்த சில தினங்களுக்கு முன் கூட இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்து மொட்டையடித்து அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..
கடந்த செப்டம்பர் 23ம் தேதி கூட வங்க கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 37 மயிலாடுதுறை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்., அவர்களை விடுவிக்க கோரி நேற்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியிருந்தார்..
அதற்கு தீர்வு கிடைப்பதற்குள் இன்று மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது… இன்று நெடுந்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த 17 மீனவர்களை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்துள்ளனர்.. மேலும் அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..
கைது செய்யப்பட்ட 17 மீனவர்கள் காங்கேசன் துறை கடற்கரை முகாமில் இலங்கை கடற்படை அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்கள் மீன்பிடித்த வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியது மீனவர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..