“நீங்க போடும் ஓட்டு.., அது தான் மோடிக்கு வைக்கும் வேட்டு..” வடசென்னையை கலக்கும் உதயநிதி..!!
நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் மக்கள் மனதில் அதிகரித்து கொண்டே வந்தாலும் அதே சமையம் கட்சி வேட்பளார்களும் அதற்கு ஏற்றார் போல தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயில் அருகே வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீரசாமி ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவின் சாதனைகள் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அருமை சகோதரர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு வரலாம் என்று நினைத்தேன்.
அப்படித்தான் நினைத்துக் கொண்டு வந்தேன் ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு தான் தெரிகிறது என்னை விட அதிக ஆர்வத்துடன் எழுச்சியுடன் வெற்றி பெறும் எண்ணத்துடன் அனைவரும் இங்கு வந்து உள்ளீர்கள்.. கரெக்டா..?
இப்பவே முடிவு பண்ணிட்டீங்களா தாய்மார்கள் முடிவு பண்ணி விட்டீர்களா என்ன சின்னம். வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடிக்கு சென்றீர்களா கண்ணுக்கு ரெண்டே ரெண்டு தான் தெரியணும் ரொம்ப சுலபம் வாக்குப்பெட்டியில் இரண்டாவது பேர் இரண்டாவது இடம் நம்முடைய வேட்பாளர் பெயர் கலாநிதி வீராசாமி.
டாக்டர் கலாநிதி வீராசாமி என்று இருக்கும் அதற்கு பக்கத்தில் நம்முடைய வெற்றி சின்னம் உதயசூரியன் இருக்கும். அதுக்கு பக்கத்துல ஒரு பட்டன் இருக்கும் அந்த பட்டனில் “நீங்க போடுறீங்க இல்ல ஓட்டு அதுதான் மோடிக்கு வைக்கிற வேட்டு”.
தேர்தலுக்கு மட்டும் வரும் மோடி :
மோடி நமக்கு திரும்பத் திரும்ப வேட்டு வைத்துக் கொண்டிருக்கிறார். 2019 இல் இருந்து வைக்கறீங்க 2021 தேர்தலிலும் வைத்தீர்கள். திருந்துனாரா இல்லை மக்களுக்கு எதனால் செய்தாரா தமிழ் நாட்டு பக்கம் எட்டி பார்த்து உள்ளாரா..? வெறும் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் ஒன்றிய பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டு பக்கம் வருவார்.
இந்த நேரத்துல ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உறுப்பினர் முதல்வர் அனுமதியுடன் செய்திருக்கின்ற சாதனைகளில் சிலவற்றை மட்டும் சொல்லிக் காட்ட விரும்புகிறேன் இதைத்தொடர்ந்து ரேவதி என்ற பெண் கொடுத்த செல்போன் மூலம் செல்ஃபி எடுத்து அனைவரையும் சேர்த்து எடுத்து உள்ளேன் என்று கொடுத்தார்.
பெண்மணி உற்சாகத்துடன் செல்போனை வாங்கிக் கொண்டார் வடசென்னையில் 171 கோடி செலவில் நாள் ஒன்றுக்கு 120 மில்லியன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
திமுக நிறைவேற்றிய திட்டங்கள் :
ராயபுரம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை 30 ஆக இருந்த ஆபரேஷன் தியேட்டர் 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ஸ்டான்லி சுரங்கப்பாதை கழிவுநீர் தமிழக முதல் அமைச்சரால் சரி செய்யப்பட்டுள்ளது.
ரூபாய் 150 கோடி ரூபாய் முதலீட்டில் 1044 நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் கட்டி முடிக்க ப்பட்டுள்ள விரைவில் மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
செட்டி தோட்டத்தில் 45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் 240 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் ராயபுரத்தில் மட்டும் 96 கோடி மதிப்பீட்டில் பணிகள் துவக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பசியை போக்குவதற்காக பள்ளிகளில் முதல்வரால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலத்தில முதலமைச்சர் காலை உணவு தொடங்கப்பட்டுள்ள அது நம்முடைய திராவிட மாடல் அரசால் கொண்டுவரப்பட்டது.
நம்ம தலைவரால் தான் பெருமையா சொல்றோம் இல்ல இந்த முதல் அமைச்சர் காலை உணவு திட்டத்தை பக்கத்தில் உள்ள தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் அமுல் படுத்தி உள்ளனர்.
அதேபோல் மூன்று நாளைக்கு முன்பு டிவியில் தொலைக்காட்சியில் அமெரிக்கா போல் கனடா நாடு வளர்ச்சி அடைந்த நாடு அந்த கனடா நாட்டின் பிரதமர் அவர் பெயர் ஜஸ்டின் ருடோ அவர் சொல்லி இருக்கார்.., தமிழ்நாட்டில் முதலமைச்சர் கொண்டு வந்துள்ள காலை உணவு திட்டம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
அதனால் இந்த திட்டத்தை கனடா நாட்டின் அறிமுகப்படுத்துகிறேன். என்று முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை கனடாவில் அறிமுகப்படுத்தியுள்ளனர் இதுதான் நம் திராவிட மாடல் அரசு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது பேசினார்.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..