”தென்னை சார்ந்த பொருட்களின் பயன்பாடு”.. வேண்டுகோள் விடுத்த அமைச்சர்..!
நாமக்கல் கவிஞர் மாளிகையில் பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களால் நூலாக்கம் செய்யப்பட்டுள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டினை வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை
அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரன் பெற்றுக்கொண்டார்..,
அப்போது பேசிய அமைச்சர் சாமிநாதன், இந்தியாவிலே தென்னை சாகுபடியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது…
நீண்ட நாள் பயிர் என்பதன் அடிப்படையில் நோய் தாக்கத்தால் தென்னை விவசாயம் பாதிக்கப்படுகிறது. இன்னும் விழிப்புணர்வை மேற்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இந்த கையெடு வெளியிடபட்டு உள்ளது.
நிச்சயம் இது விவசாயிகளுக்கு பயன்படும் என்றும் ஊடுப்பயிர் மற்றும் நீர் பாசன முறைகள் தொடர்பான விவரங்கள் இந்த கையேட்டில் இடம் பெற்று உள்ளது.
நாளை மறுதினம் முதல் அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு இந்த புத்தகம் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்.
அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் வேண்டுகோள்:- ,
தென்னை விவசாயம் பொறுத்த வரையில் 30 சதவீதம் மேல் தமிழகத்தில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது .
கூடுதலாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும் தற்போது பெய்து வரும் மழை பாதிப்புகளால் எந்த பயிர் சேதமும் இல்லை, 91000 ஹேக்டேர் தென்னை சாகுபடி தமிழகத்தில் செய்யப்பட்டு உள்ளது எனவும், 36 கோடி நிதியில்
நோய் தாக்கத்தில் உள்ள தென்னை மரங்களுக்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்னை சார்ந்த பொருட்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
-பவானிகார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”