இயற்கை விவசாயத்தை நாடும் சூழல் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
வேளாண்மை -மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் சென்னை, சேப்பாக்கம், வேளாண்மைத் துறை ஆணையரக அலுவலக கூட்ட அரங்கில் வேளாண்மைத் துறை சார்பில் வேளாண் விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்குகினார்.
நிகழ்சியில் பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் , இந்த அரசு பொறுப்பேற்றது முதல் 162 பணிநியமனங்களை வழங்கப்பட்டு உள்ளது, விவசாயிகள் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ஊக்க தொகையாக அளிக்கப்பட உள்ளது.
மாநில அளவில் 6 இயற்கை விவசாயிகளுக்கும் முதல் பரிசாக ஒரு லட்ச ரூபாய்கான காசோலையும் இரண்டாம் பரிசாக 60 லட்சமும் மூன்றாம் பரிசாக 40 லட்ச ரூபாய்கான காசோலைகள் வழங்கபட்டது.
மேலும் வேளாண் உழவர் நலத்துறையில் பணிபுரிந்து பணிகாலத்தில் இயற்கை எய்திய பணியாளர்கள் வாரிசு தாரர்களுக்கு 19 வாரிசுகளுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கபட்டுள்ளது என்றார்.
அதேபோல் பெரிய அளவிலான இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கவும் திட்டமிட்டு உள்ளோம் என்றார்.
மேலும் இயற்கை விவசாயம் இன்று மக்கள் நாடும் சூழல் அதிகரித்துள்ளது இளைஞர்கள் அதிகம் பேர் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்,